பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு பிரகாஷ்சிங் பாதல் அழைப்பு
சென்னை: பஞ்சாப் முதல்வராக தாம் மீண்டும் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை பிரகாஷ் சிங் பாதல் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரகாஷ்சிங் பாதல் மார்ச் 14-ந் தேதி அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதல் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால் தம்மால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மைத்ரேயன் அல்லது தம்பித்துரையை தமக்கு பதிலாக ஜெயலலிதா அனுப்பி வைப்பார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம்- பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. தேர்தலில் வென்ற பாதலுக்கு முன்னர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மமதா?
இதனிடையே உத்தரப்பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ், பஞ்சாப்பில் பிரகாஷ்சிங் பாதல் ஆகியோர் பதவியேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மேற்குவங்க முதல்வர் மதமா அழைக்கப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications