காமன்வெல்த் போட்டியின் போது அரசு இணையதளங்கள் மீது 200க்கும் மேற்பட்ட "ஹேக்கர் தாக்குதல்கள்"
டெல்லி: கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற போது மத்திய அரசு இணையதளங்களை குறிவைத்து 200க்கும் மேற்பட்ட ஹேக்கர்கஸ் தாக்குதல்கள் நடந்ததாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை இயக்கமம் தெரிவித்துள்ளது.
அரசு இணையதளங்களின் மீதான தாக்குதல்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சசகத்தான ஆலோசகர் வி.கே.சரஸ்வத் கூறியதாவது:
காமன்வெல்த் போட்டிக் காலத்தின் போது அரசு இணையதளங்களைக் குறிவைத்து வெளிநாட்டு சக்திகள் இணையம் வழி தாக்குதல்களை நடத்தின. இத்தகைய தாக்குதல்களை முறியடிக்க வலிமையான வல்லுநர் குழு எமக்கு உதவியது.
இத்தகைய தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் தடுக்க தனித்தனி சர்வர்கள், ரெளட்டர்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
காமன்வெல்த் போட்டி காலத்தில் 200க்கும் மேற்பட்ட முறை அரசு இணையதளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அண்மையில் கூட மத்திய அரசின் 9 இணையதளங்களை ஹேக்கர்ஸ் முடக்கியதாக அரசு தெரிவித்திருந்தது. இத்தகைய தாக்குதல்களை நாம் முன்கூட்டியே துல்லியமாக கணித்துவிட முடியாது.
இருப்பினும் அரசு இணையதளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications