எம்.எல்.ஏவாக பதவியேற்றார் சங்கரன்கோவில் முத்துச்செல்வி
Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில் தனித் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துச்செல்வி அபார வெற்றி பெற்றார். இதையடுத்து வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்ட அவர் சென்னை விரைந்தார்.
அங்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் சட்டசபைக்குச் சென்றார். அங்கு அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications