கூடங்குளம் போராட்டத்துக்கு உதவும் என்ஜிஓக்கள் மீது தொடர்ந்து விசாரணை: நாராயணசாமி

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக மாநிலங்களவையில் நாராயணசாமி கூறியதாவது:
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள் உதவி அளித்தது பற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விசாரணை இன்னும் முடியாத நிலையில் எதிர்ப்பாளர்களுக்கு உதவி அளித்த தொண்டு நிறுவனங்கள் எவை என்பது பற்றிய தகவல்களை இப்போது வெளியிட முடியாது.
சில தொண்டு நிறுவனங்களின் வரவு-செலவு கணக்குகள் சரியாக இல்லை. அவை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் 2 தொண்டு நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு உள்ளது. மேலும் 2 குற்றவழக்குகளை தொண்டு நிறுவனங்கள் மீது தமிழக போலீசார் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
உள்துறை கண்காணிப்பு
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு உதவிய தொண்டு நிறுவனங்கள் பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக விசாரணை நடத்தி அதன் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த பிரச்சினையில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்து உள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு 4 தொண்டு நிறுவனங்கள் உதவி அளித்து இருப்பதாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. அதுபற்றியும் விசாரணை நடக்கிறது. கூடங்குளத்தை முடக்க சில சக்திகள் ஈடுபட்டுள்ளன. அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதுகாப்பு வளையம்
கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது. கூடங்குளத்தை சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆனாலும் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் தேசத்துக்கு எதிராக உள்ளார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை துரிதமாக மேற்கொண்டு, அதனை திறக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பிரச்சினையில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கூடங்குளம் பிரச்சினையில் மத்திய அரசுடன் அவர் இணைந்து செயல்படுகிறார்.
தொண்டு நிறுவனங்கள் மீது வந்த புகார்கள் அடிப்படையில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை வழக்கமானது தான். இது வேண்டுமென்றே யார் மீதும் எடுக்கும் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்றார் அவர்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications