சென்னையில் 4வது முறையாக நில அதிர்வு-நிம்மதியிழந்த மக்கள்!
சென்னை: சென்னையில் இன்று மாலை வரை 4 முறை நில அதிர்வு ஏற்பட்டது.
சென்னையில் பிற்பகல் 2.15 மணிக்கு 6.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்னும் துல்லியமான தகவல்களை அரசு வெளியிடவில்லை.
பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, மாலை 4.19 க்கு மீண்டும் லேசான நில அதிர்வுகளை சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.4 புள்ளிகளாக இருந்தது. இதைத் தொடர்ந்து 5.45 மணிக்குள் அடுத்தடுத்து மேலும் இரு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று பிற்பகலுக்குப் பின் உடனடியாக விடுமுறை அறிவித்த தமிழக அரசு, சூழலைப் பொறுத்து நாளையும் விடுமுறை அளிக்க உத்தேசித்துள்ளது.
இரண்டாம் முறையாக நில அதிர்வு உணரப்பட்டதுமே, மொத்த அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் வெறிச்சோடின. அரசு அலுவலகங்களில் அறிவிக்கப்படாத விடுமுறையாகிவிட்டது இன்று.












Click it and Unblock the Notifications