பெண் உதவியாளரிடம் பாலியல் பலாத்காரம்: கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவன உரிமையாளர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தம்மிடம் உதவியாளராக இருந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டு மெக்னிக்கல் சாலையில் அந்தோணி ஜான்மில்டன் என்பவரை இயக்குநராகக் கொண்டு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மீது பல புகார்கள் ஏற்கெனவே கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் ஜான்மில்டன் மீது பாலியல் பலாத்கார புகாரைத் தெரிவித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், கடந்த வாரம் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தம்மிடம் தவறாக நடக்க முயற்சித்தார். ஆனால் அவரிடம் தப்பியோடிய என் மீது மயக்க ஸ்பிரே அடித்து சீரழித்தார். இதேபோல் ஒருவாரத்தில் 4 முறை தம்மை பாலியல் பலாத்காரம் செய்தார் ஜான்மில்டன் என்று கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அந்தோணி ஜான்மில்டன் நேற்று இரவு விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். பாலியல் புகார் கூறியுள்ள பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+