கருணாநிதி தலைமையில் திமுக வக்கீல்கள் கூட்டத்திற்கு அழைப்பு!

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆளுங்கட்சியினர் தமிழகம் முழுவதும் உள்ள கழக முன்னணியினரை பழிவாங்குவதையே முக்கிய பணியாகக் கொண்டு பொய் வழக்குகளை புனைந்தும் - போலீஸ் படையைக் கொண்டு மிரட்டியும் - கழகத்தை வலுவிலக்கச் செய்யலாம் எனக் கனவு கண்டு அதனை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர் கே.பி.சங்கர், அவரது குடும்பத்தினர் ஆகியோரை கைது செய்தும் கே.பி.சங்கரின் மனைவியை நள்ளிரவில் வீடு புகுந்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றும், உச்சநீதிமன்ற விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர் மீது பொய் வழக்குகளை தொடுத்து, அவர் குடும்பத்தையே அழித்து விடும் முயற்சியில் இந்த அ.தி.மு.க. அரசு ஈடுபட்டு, காவல் துறையை திட்டமிட்டு ஏவி விட்டிருக்கிறது.
இதுபோன்ற அ.தி.மு.க. அரசின் போக்கை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்திட தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. வக்கீல்கள் கூட்டம் வருகிற 12-ந் தேதி காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. அதுபோது தி.மு.க. வக்கீல்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications