ஜெ.வுடன் புதுக்கோட்டை முத்துக்குமரன் குடும்பத்தினர் திடீர் சந்திப்பு
சென்னை: மறைந்த புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துக்குமரனின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம் முதல்வர் நலம் விசாரித்தார்.
இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி மறைந்த எஸ்.பி. முத்துக் குமரனின் மனைவி சுசீலா தனது குடும்பத்தினருடன் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேரில் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி சுசீலா மற்றும் அவரது மகன் எம்.நரேன்குமார், மகள் என்.நர்மதா ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது, முதல்வர் ஜெயலலிதா, கணவரை இழந்துவாடும் சுசீலாவிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார் என்று கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டைக்கு ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்ற இத்தொகுதியை அக்கட்சிக்கு கொடுக்காமல் அதிமுக தானே போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications