For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!

Google Oneindia Tamil News

தர்மபுரி: மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு மகள் தடையாக இருக்கிறாரே என்று விபரீதமாக யோசித்த ஒரு பெண், தனது மகள் என்றும் கூட பாராமல் டானிக்கில் விஷத்தைக் கலந்து கொண்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அந்தக் கொடுமைத் தாயாரையும், அவருடைய மருமகனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வாசிக்கவுண்டனூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் குமார். 25 வயதான இவருக்கும், வேடியூர் கிராமத்தைச் சேர்ந்த காசி, உமா தம்பதிகளின் மகளான 21 வயது லட்சுமிக்கும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

காசி ஏற்கனவே இறந்து விட்டார். உமா மட்டும் தனியாக வசித்து வந்தார். அவரை அடிக்கடி குமாரும், லட்சுமியும் வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அப்போது உமாவுக்கும், மருமகன் குமாருக்கும் இடையே தகாத பழக்கம் ஏற்பட்டு விட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருக்க ஆரம்பித்தனர்.

இந்த கள்ள உறவு நிரந்தரமாக வேண்டும் என்று உமா நினைத்தார். அதற்கு தனது மகள் இடையூறாக இருப்பதாக அவர் கருதினார். இதையடுத்து மகளைத் தீர்த்துக் கட்ட தீர்மானித்தார், இதை மருமகன் குமாரிடம் கூறினார்.

இதைத் தொடர்நது குமார் ஒரு டானிக்கை வாங்கி வந்தார். அதில் விஷத்தைக் கலந்து விட்டனர். மூலிகை டானிக், உடம்பு சத்து பிடிக்கும் என்று கூறி அந்த டானிக்கை மகளுக்கு கொடுத்துள்ளார் உமா. அதை வாங்கி உமா குடித்தார். அப்போது அங்கு வந்த குமாரின் தாய், தந்தையும், தங்களுக்கும் கொடுக்குமாறு கூறி வாங்கிக்குடித்துள்ளனர். டானிக்கை குடித்த சிறிது நேரத்தில் மூன்று பேரும் மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து மூன்று பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குமாரின் மனைவி லட்சுமி மரணமடைந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிரேதப் பரிசோதனையில் லட்சுமியின் உடலில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் குமாரையும், மாமியார் உமாவையும் பிடித்து விசாரித்தனர். அதில் குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மருமகனுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு, தனது சுகத்திற்காக பெற்ற மகளை விஷம் கொடுத்துக் கொன்ற உமாவின் செயல் அப்பகுதியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A woman was arrested for killing her daughter to continue her illicit relationship with her son in law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X