அரசு பள்ளியில் தலித் மாணவர்களை சேர்க்க ஒரு சமூக பெற்றோர்கள் எதிர்ப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஆடையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தலித் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று மற்றொரு சமூக பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவ்த்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடையூரில் அரசு நடுநிலைப் பள்ளியும் ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது. ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியில் சரியாக பாடம் நடத்தப்படாததால் அரசு நடுநிலைப் பள்ளியில் சில தலித் மாணவர்களை பெற்றோர் சேர்த்தனர்.
ஆனால் இதற்கு மற்றொரு சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து தலித் மாணவர்களுக்கு உடனே டிசி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டமும் நடத்தப்பட்டதால் அங்கு கல்வித்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒரே பகுதியில் ஆதி திராவிடர் பள்ளியும் அரசு நடுநிலைப் பள்ளியும் இயங்காமல் ஒரே பொதுப் பள்ளியாக இயங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்து












Click it and Unblock the Notifications