ராமஜெயம் வழக்கு: முக்கிய பிரமுகர்களை விசாரிக்க மீண்டும் உயர் அதிகாரிகள் திருச்சி வருகை

Subscribe to Oneindia Tamil

Ramajayam
திருச்சி: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு பல மாதங்களாகிவிட்ட நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமஜெயம் கொலை வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கடந்த 27-ந் தேதியன்று ஐஜி மஞ்சுநாத், டிஐஜி ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி. மகேஸ்வரி ஆகியோர் திருச்சி வந்து விசாரணை நடத்தினர். ராமஜெயம் உடல் கிடந்த திருவளர்ச்சோலை பகுதியிலும் ஆய்வு நடத்தினர்.

மேலும் 5 சிபிசிஐடி தனிப்படைகளும் களத்தில் இறக்கிவிடப்பட்டு விசாரணைகளை நடத்தி வருகிறது. ராமஜெயத்துக்கு செல்போனில் பேசிய நபர்கள், அவர் வாக்கிங் போனதை நேரில் பார்த்த நபர்கள் என பலரிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராமஜெயம் கொலை செய்யப்பட்டதற்கு 16 விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுவதால் அரசியல் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள், ரவுடிகள் என பலரது பட்டியலை சிபிசிஐடி தயாரித்துள்ளது. இனி அவர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதனால் அந்த பிரமுகர்கள் அனைவருக்குமே தற்போதே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எந்த நேரத்திலும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மீண்டும் திருச்சிக்கு ஓரிருநாளில் வரக்கூடும் எனத் தெரிகிறது. அப்போது இந்த பிரமுகர்களிடம் விசாரணை தொடங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+