அசாமில் வெள்ளப் பாதித்த பகுதிகளில் இன்று பிரமதர் மன்மோகன், சோனியா ஆய்வு
கவுஹாத்தி: தென்மேற்கு பருவ மழையினால் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலசரிவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலரை காணவிலலை. இந்த நிலையில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பாதித்த இடங்களை இன்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தென் மேற்கு பருவ மழை காரணமாக அசாம் மாநிலத்தில் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. அசாமில் உள்ள 27 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மேலும் சில இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 77 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பலரை காணவில்லை.
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஜோஹத்ஸ் ரோரியா விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களை மாநில முதல்வர் தருண் கோகோகை வரவேற்றார்.
அதன்பிறகு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, தருண் கோகோகை ஆகியோர் வெள்ளப் பாதிப்பில் சிக்கியுள்ள பகுதிகளை பார்வையி்ட்டனர். தனி ஹெலிகாப்டர் மூலம் முஜூலி தீவு, ஜோர்ஹட், சிப்சாகர், லக்ஹிம்பூர் மற்றும் பீமாஜி மாவட்டங்களில் தலைவர்கள் ஆய்வு நடத்தினர்.
கடந்த 2 நாட்களாக பிரம்மபுத்திரா மற்றும் கபிலி ஆறுகள் அபாய நிலையை தாண்டி பாய்ந்தோடுவதை பார்வையிட்டனர். அதன்பிறகு கவுஹாத்திக்கு வந்த பிரதமரும், சோனியா காந்தியும், மாநிலத்தில் நடைபெறும் வெள்ள மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் ஆலோசித்தனை நடத்தினர்.
அதன்பிறகு கவுஹாத்தியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் டெல்லிக்கு திரும்பினர்.
அசாமில் உள்ள 2,166 கிராமங்களில் வசிக்கும் சுமார் 19.37 லட்சம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மாநிலத்தின் 16 பகுதிகளில் வெள்ள மீட்பு பணிகளில் தேசிய பேரழிவு தடுப்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவ வீரர்களை கொண்ட 7 குழுக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications