ராஜ்யசபா அமளிகளில் தொடர்ந்தும் சிக்கப் போகிறார் ஹமீத் அன்சாரி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியையே வேட்பாளராக மீண்டும் நிறுத்துவது என்று காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

ஹமீத் அன்சாரியை நிறுத்துவது குறித்து இடதுசாரிகள், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தியுள்ளது. இந்தக் கட்சிகள் அனைத்துமே அன்சாரியை ஆதரிக்க உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மமதா பானர்ஜியுடன் காங்கிரஸ் ஆலோசனை நடத்தவில்லை. மமதாவின் தயவே இல்லாமல் அன்சாரியை குடியரசு துணைத் தலைவராக்கிவிட முடியும் என நினைக்கிறது காங்கிரஸ்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 7-ந் தேதி நடைபெற உள்ளது. அன்சாரியின் தற்போதைய பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ந்தேதி முடிவடைகிறது.

குடியரசு துணைத் தலைவராக இருப்பவர்தான் நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவராகவும் செயல்படுவார். அந்த வகையில் மீண்டும் ராஜ்யசபா அமளிகளை தொடர்ந்தும் எதிர்கொள்ளக் கூடியவராக ஹமீத் அன்சாரி "திகழ்கிறார்'.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+