குஜராத் கலவரத்தில் தப்பு செய்திருந்தா தூக்கில் போடுங்க...: "உருது" பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்

இந் நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முதல் முறையாக உருது மொழியில் வெளியாகும் வார ஏட்டுக்கு பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், குஜராத் வன்முறைகளில் தமக்கு தொடர்பில்லை.. தாம் தவறு செய்திருந்தால் தம்மை தூக்கிலிடுங்கள் என்று ஆவேசமாக பேட்டி கொடுத்துள்ளார்.
சரி இந்த "உருது" மொழி ஏட்டுக்காக பேட்டி எடுத்தவர் யார்? மாநிலங்களவை முன்னாள் எம்.பியும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவருமான ஷாகித் சித்திக்தான். அந்த வார ஏட்டில் நரேந்திர மோடியின் பேட்டி கவர் பேஜ் ஸ்டோரியாக வந்திருக்கிறது. மொத்தம் 6 பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
இந்துராஷ்டிரம், தீவிரவாதிகள் என பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கும் நரேந்திர மோடி, கோத்ரா ரயில் எரிப்புகளுக்குப் பிந்தைய மத வன்முறைகள் பற்றியும் பேசியிருக்கிறார். ஆனால் இந்த வன்முறைகளுக்கு தாம்தாம் காரணம் என்பதைப் போல ஊடகங்கள் சித்தரிக்கின்றன... அப்படி என் மீது தவறு இருப்பது உண்மையானால் என்னை தூக்கிலிடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.
சரி..சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஒருவர், நரேந்திர மோடியை முன்னிறுத்த வேண்டிய தேவை என்ன வந்தது? அப்படியனால் மோடியை சமாஜ்வாதி கட்சி ஏற்கிறதா? என்று இயல்பாக எழும் கேள்வியை நிராகரிக்கிறார் சித்திக்,. தாம் ஒரு ஊடகவியலாளன் என்ற முறையிலேயே இந்த பேட்டியை எடுத்தேன்.. இதற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் முலாயம்சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்.
சரி பேட்டி எடுக்க தோன்றியது எப்படி? என்பதற்கும் ஒரு விளக்கம் வைத்திருக்கிறார் சித்திக்..மும்பையில் திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட் மற்றும் வசன கர்த்தா சலிம் கான் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது குஜராத் பற்றிய பேச்சுகளும் வந்தது. அப்போது மகேஷ்பட்தான் கூறினாராம், எல்லாவற்றுக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும் என்று.. இந்த உந்துதலிலேயே நரேந்திர மோடியை பேட்டி எடுத்தேன் என்கிறார் சித்திக்.
இது உண்மைதானா? என்று மகேஷ் பட்டிடம் கேட்டால், குஜராத் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் நாங்கள் சந்தித்துக் கொண்டபோது இதுபோல் பேசியது உண்மைதான் என்கிறார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications