ரூ. 200 கோடி நிலத்தை போலி பட்டா போட்டு விற்றதாக பரிதி இளம்வழுதி மீது புகார்
சென்னை: ரூ. 200 கோடி மதிப்புள்ள நிலத்தை பரிதி இளம்வழுதி அவரது உதவியாளர் ககாரியன் மற்றும் 3 பேர் சேர்ந்து போலி பட்டா தயாரித்து விற்பனை செய்துவிட்டதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரங்கா ரெட்டி இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு புகார் பிரிவில் ஒரு மனு அளித்தார். அதில்,
1985ம் ஆண்டு தமிழக அரசு தர்ம தோப்பு அறக்கட்டளை நிர்வாகத்திற்காக 7 ஏக்கர் 46 சென்ட் நிலத்தை வழங்கியது. இந்த நிலம் போலி பட்டா தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதிக்கும் தொடர்பு உள்ளது.
இதுகுறித்து, 01-08-2011 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ரூ. 200 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை பரிதி இளம்வழுதி அவரது உதவியாளர் ககாரியன் மற்றும் 3 பேர் சேர்ந்து போலி பட்டா தயாரித்து விற்பனை செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் ஸ்டாலினுடன் மோதலில் உள்ள பரிதி இளம்வழுதி கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருக்கும் நிலையில் இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications