சுதந்திர தினத்தன்று பாக். கொடியேற்றினார்களாம்... வதந்தி இமெயிலால் பரபரப்பு!
ஹைதராபாத்: பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆந்திராவில் அந்நாட்டு கொடியேற்றி கொண்டாடுவது போன்ற படத்துடன் கூடிய வதந்தி இமெயில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் நாட்டு சுதந்திர தினமாகும். இந்த நிலையில் ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சிலர் கடந்த 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று, அந்நாட்டு கொடியை ஏற்றி கொண்டாடியதாக வதந்தி இ-மெயில் பரவியது.
இணையதளத்தின் மூலம் பரவிய இந்த வதந்தி செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பேஸ்புக், கூகுல், டுவிட்டர் என்று இன்டர்நெட்டில் இந்த செய்தி வேகமாக பரவியது. இந்த செய்தியில் சிலர் குழுவாக நின்று பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது போன்ற படம் வெளியாகி இருந்தது.
அதன் அருகில் வெளியான செய்தியில், ஆந்திராவை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் உள்ள முஸ்லீம் மக்கள் பாகிஸ்தானின் 65வது சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி அளித்துள்ளது. இது போன்ற ஒரு வெட்கக்கேடான சம்பவத்திற்கு, உலகில் வேறெந்த நாட்டிலும் அனுமதி அளிக்கப்பட்டது இல்லை. வேறெந்த நாடும் சுதந்திர தினத்தை இப்படி கேவலப்படுத்தியது இல்லை.
பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்படும் காங்கிரஸ் கோழைகளால் இந்தியா ஆட்சி செய்யப்படுகிறது என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? ஆந்திரா மாநில முதல்வர் என்.கிரண் குமார் ரெட்டி, இதற்கு சிறந்த மாதிரியை காட்டியுள்ளார். இந்தியாவிற்கு நல்லது நடக்க வேண்டும் விரும்பும் நபர் நீங்கள் என்றால், இந்த செய்தியை பரப்புங்கள் என்று அந்த இ மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இ-மெயில் கிடைத்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், இதை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த இ-மெயில் குறித்து விசாரித்த போது, பாகிஸ்தான் நாட்டின் சிந்து பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போட்டோவை, ஹைதராபாத்தில் கொண்டாடியது போல உருமாற்றி இன்டர்நெட்டில் வெளியிட்டது தெரியவந்தது.
மேலும் ஹைதராபாத்தில் இது போன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை என்பது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த சிலர் தவறான தகவல்களை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து இன்டர்நெட்டில் இது குறித்து செய்தி வெளியிட்ட 80க்கும் மேற்பட்ட இணையதளங்களில் இருந்து அந்த செய்தி நீக்கப்பட்டது. சமுதாய இணையதளங்களில் மேற்கொண்டு இந்த செய்தி பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications