சந்திரபாபு நாயுடுவை வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்க கூடாது: என்டிஆர் மனைவி பிரதமருக்கு கடிதம்

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 15 ஆண்டுகளாக சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தாருடன் ரகசியமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சி தலைவரான அவர் ரகசியமாக வெளிநாடுகளுக்கு சென்று வர வேண்டிய அவசியம் என்ன?
நாட்டியிலேயே செல்வந்தரான அரசியல் தலைவர் சந்திரபாபு நாயுடு தான் என்று 'தெஹல்கா' என்ற பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அவருக்கு பினாமி பெயரில் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் ஹோட்டல்கள், நிறுவனங்கள் இருப்பதாக அந்த பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு அரசியலுக்கும், கட்சியினருக்கும் புதியவர்களான சி.எம்.ரமேஷ் மற்றும் சுஜனா சவுத்ரி ஆகியோரை சந்திரபாபுநாயுடு, ராஜ்யசபா உறுப்பினர்களாக நியமித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் தெலுங்கு தேச கட்சியின் தேர்தல் செலவுகளுக்கு மேற்கண்ட இருவரும் அதிகளவில் பணத்தை செலவு செய்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் ரகசியமாக வெளிநாடுகளுக்கு சென்று வருவதில் மர்மம் உள்ளது. எனவே அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்து, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications