சென்னை மாநிலக் கல்லூரியில் மீண்டும் மோதல்- மாணவர் ஒருவருக்கு கத்திக் குத்து!

சென்னை மாநிலக் கல்லூரியில் அண்மையில் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஞானகார்த்திக் என்பவர் வெற்றி பெற்றார். இவரது ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வெற்றியைக் கொண்டாட முயற்சித்தனர். அப்போது எதிர்தரப்பினர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் மோதல் உருவாகும் சூழ்நிலையில் காவல்துறை தலையிட்டு மோதலைத் தவிர்த்தது. பின்னர் 4 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்றும் மாணவர்கள் கல்லூரிக்கு வந்திருந்தனர். ஆனால் மாணவி ஒருவர் மரணமடைந்திருந்த காரணத்தால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஞானகார்த்திக்கின் ஆதரவாளர்கள் கல்லூரியில் ஒன்றுகூடி தேர்தல் வெற்றியைக் கொண்டாட திட்டமிட்டனர். அப்போது கடற்கரை சாலையில் நின்று கொண்டிருந்த எதிர்தரப்பு மாணவர்கள் மீண்டும் கல்வீசினர். அப்போது காவல்துறையினர் தலையிட்டு மீண்டும் மோதலைத் தவிர்த்தனர். இந்த சம்பவங்களின் போது மாநிலக் கல்லூரியில் நிர்வாக அனுமதியுடன் போலீசார் சோதனை நடத்தி மொத்தம் 8 கத்திகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் கல்லூரிக்கு வந்த ஞானகார்த்திக் ஆதரவாளர்கள் தேர்தல் வெற்றியைக் கொண்டாட முயன்றனர். அப்போதும் எதிர்தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பு மாணவர்களிடையேயான மோதலில் ஒருவர் கத்திக் குத்து காயங்களுடனும் மேலும் இருவர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலால் மாநிலக் கல்லூரியில் பதற்றம் உருவானது. இதையடுத்து மீண்டும் இன்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications