சிறுவாணி அணை விவகாரம்: கேரளாவுக்கு எதிராக போராட்டம் -ஆயிரம் பேர் கைது
கோவை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரளாவைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற அனைத்துக் கட்சியினர் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அகழிசித்தூரில் அணை கட்ட கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக அனைத்துக் கட்சியினரும் கேரள எல்லையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து இருந்தனர்.
இதற்காக இன்று காலை அனைத்துக் கட்சியினரும் கோவை அருகே ஆணைக்கட்டில் ஒன்று கூடி அங்கிருந்து புறப்படத் தயாராக இருந்தனர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும் போலீசாரின் தடையை மீற முயன்ற 1000 பேர் கைது செய்யப்பட்டனர்,
திமுகவின் பொங்கலூர் பழனிச்சாமி, மதிமுக எம்பி கணேச மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.ஆறுமுகம், தந்தை பெரியார் தி.க பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கைதாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications