கூடங்குளம் போராட்டக்காரர்கள் தாக்குதலில் 5 போலீஸார் காயம்
Subscribe to Oneindia Tamil

கூடங்குளம் கடற்கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை போலீஸார் இன்று காலை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்து விரட்டினர்.
அப்போது பத்திரிக்கையாளர்களையும் போலீஸார் தாக்கி விரட்டினர். அதேபோல போலீஸார் மீது செருப்புகள், கட்டைகளை வீசியும், கடல் மணலை எடுத்து வீசியும் பொதுமக்களும் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஐந்து போலீஸார் காயமடைந்ததாகவும், அவர்களை அணு மின் நிலைய மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவர்களுக்கு என்ன மாதிரியான காயம் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்துத் தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications