டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்ய தமிழக அரசு எதிர்ப்பு
சென்னை: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான சென்னை அமர்வு நீதிமன்றத்தின் பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
1986ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னையில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா திருநாவுக்கரசு என்ற இளைஞரை சுட்டுக் கொன்றார். இந்த வழக்கில் டக்ளஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா தேடபடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்ப்போது இலங்கை அமைச்சராக இருக்கும் டக்ளஸ், தம்மீதான பிடிவாராண்ட்டை ரத்து செய்ய கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீது தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிபதி எஸ். ராஜகோபாலன் முன்னிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் சென்னை மாநகர அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் எம். பிரபாவதி பதில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவில், டக்ளஸ் தேவானந்தா மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றி அவர் தனது மனுவில் குறிப்பிடவில்லை. அவர் இலங்கையின் அமைச்சர் என்ற சட்டபூர்வமான பொறுப்பில் உள்ளார். ஆகவே அவர் சட்டத்தை மதிக்க வேண்டும். தனது மீதான கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கினை அவர் நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திக்க வேண்டும். மாறாக, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவர், கடந்த பல ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணையில் பங்கேற்காமல் இருப்பது ஏன் என்பதற்கான சரியான காரணத்தை தனது மனுவில் கூறவில்லை. மேலும், இப்போது தன் மீதான பிடியாணையை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறார். ஆனால், அதற்கான சரியான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. எனவே, அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை இம்மாதம் 20-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications