வேலூரில் மருத்துவ கல்லூரி மாணவி உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு?
வேலூர்: வேலூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவ கல்லூரி மாணவி உட்பட 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் தட்பவெட்ப நிலை மாற்றம் காரணமாக பொதுமக்களிடையே காய்ச்சல் பரவி வருகிறது. ஆம்பூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. மேலும் வேலூர் சைதாப்பேட்டையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் பலியானார். இதனால் வேலூரில் தற்போது டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு டெங்கு காய்ச்சலின் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வேலூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு, டெங்கு காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் உறுதியாக இருப்பதால், அவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தனிவார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளை வெளிநபர்கள் சந்திக்க அனுமதிக்கபடவில்லை.
இது குறித்து வேலூர் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது,
வேலூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இறந்த மாணவி, டெங்கு காய்ச்சலால் இறந்தார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications