வயிற்று வலியால் பண்ருட்டி அதிமுக செயலாளர் விஷம் குடித்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

பண்ருட்டி: வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பண்ருட்டி அதிமுக செயலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம், விழமங்கலத்தை சேர்ந்தவர் எஸ்.ஏ.சி.ரவிச்சந்திரன்(46). பண்ருட்டி நகர அதிமுக செயலாளராக இருந்தார். இவருக்கு மல்லிகா(36) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

ரவிச்சந்திரனுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல்லீரல் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு, அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் நேற்று ரவிச்சந்திரன் அறை எடுத்து தங்கினார். அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த ரவிச்சந்திரனின் உடலுக்கு, பண்ருட்டி நகரசபை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவினர் திரளாக வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+