For Daily Alerts
Just In
தமிழகத்துக்கு சிங்களர் பயணம் செய்யலாம்.....: தடையை நீக்கியது இலங்கை அரசு
கொழும்பு: இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசு நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டுக்குச் சென்ற இலங்கையர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு ஆபத்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைப் பயணிகளுக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்கப்படாதிருப்பதை உறுதிசெய்வதில் தமிழ்நாட்டு அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு செல்வதற்கான பயண ஆபத்து எச்சரிக்கை தேவையில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
The Sri Lankan government has lifted its travel ban issued to Sri Lankans visiting Tamil Nadu the Ministry of External Affairs said. Issuing a statement the ministry commended the comment made by Chief Minister of Tamil Nadu J. Jayalalitha that the state government of Tamil Nadu is determined to ensure that Sri Lankan visitors to Tamil Nadu are not harmed in any way.
Story first published: Tuesday, October 9, 2012, 14:45 [IST]