அலாஸ்கா விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: பயணிகள் பீதி

Subscribe to Oneindia Tamil

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மகாணத்தில் உள்ள விமானநிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுந்த வதந்தியை அடுத்து அங்கு பதற்றம் உருவானது.

அங்குள்ள டெட் ஸ்டீவன்ஸ் ஆங்கோரேஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பயணியின் பேக்கில் வெடி குண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு அருகேயுள்ள விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். பயணிகள் கொண்டுவந்திருந்த லக்கேஜ்கள் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டன. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு இருப்பதாக கூறியது வெறும் புரளிதான் என்று தெரியவந்தது.

இதன் பின்னரே டெட் ஸ்டீவன்ஸ் ஆங்கோரேஜ் விமானநிலையத்தில் விமானங்கள் தரை இறங்க அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் விமானங்களில் பயணிகள் ஏற தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு வதந்தி தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+