'அயர்ன் பாக்ஸால்' சூடு போட்டு மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவர்!
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை கண்டித்தும் அவர் திருந்தாதால் அயர்ன் பாக்ஸால் சூடு போட்டு துடிக்கத் துடிக்கக் கொன்றுள்ளார் ஒரு கணவர்.
ஒசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் கவிதா. 27 வயதாகும் இவருக்கு சத்யபிரியா, பிரியதர்ஷினி என்ற 2 மகள்களும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
கவிதாவுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேலுச்சாமிக்குத் தெரிய வரவே, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அடிக்கடி மோதல் வலுத்துள்ளது.
பலமுறை சொல்லியும் மனைவி கள்ளக்காதலை கைவிடாததால், ஆத்திரமடைந்த வேலுச்சாமி நேற்று மாலை கடும் கோபத்தில் வீட்டில் அயர்ன் பாக்ஸை சூடாக்கி அதை வைத்து கவிதாவை கொடூரமாக சூடு போட்டு கொலை செய்தார்.












Click it and Unblock the Notifications