ஓ.பன்னீர்செல்வத்தின் மாமனார் அழகுபாண்டி தேவர் மரணம்: ஜெ. இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமனார் அழகுபாண்டி தேவர் காலமானார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தத் கடிதத்தில், தங்களின் மாமனார் அழகுபாண்டி தேவர் இன்று காலை திடீரென இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து துயரம் அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடு செய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்று நான் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அவரை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications