'சிட்டிசன் அத்திப்பட்டி' பாணியில்: உ.பி. அரசு ஆவணத்தில் காணாமல் போன கிராமம், 3,600 பேர்!!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநில அரசு ஆவணங்களில் அம்மாநிலத்தில் உள்ள செம்ராவுல் என்ற கிராமத்தின் பெயரையேக் காணவில்லை.

உத்தர பிரதேச மாநிலம் காசிபூர் மாவட்டத்தில் உள்ளது செம்ராவுல் கிராமம். அந்த கிராமத்தில் 3,600 பேர் வசிக்கின்றனர். ஆனால் அரசு ஆவணங்களில் அக்கிராமத்தின் பெயரே இல்லை. அந்த கிராமத்தில் 1,900 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் கடந்த 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்செக்ஸ் கணக்கெடுப்பின்படி செம்ராவுலில் யாருமே வசிக்கவில்லை என்று பதிவாகியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் 3 பஞ்சாயத்து தேர்தல்கள், 2 லோக்சபா தேர்தல்கள் மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஆகியவை நடந்துள்ளன.

செம்ராவுலில் வறுமை கோட்டுக்கீழ் உள்ளவர்களுக்கான அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 116. அங்கு ஒரு துவக்கப் பள்ளி உள்ளது. அதிகாரப்பூர்வமாக அங்கு யாரும் வசிக்காததால் செம்ராவுலில் நடுநிலைப் பள்ளி இல்லை.

இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் செம்ராவுல் கிராம பஞ்சாயத்து தலைவராகப் பொறுப்பேற்ற சபாஜித் சிங் குஸ்வாஹா பதவியேற்ற கையோடு இந்த பிரச்சனைகள் குறித்து அப்போதைய வருவாய் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அப்படியும் நிலைமை மாறியபாடில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+