மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தாய்லாந்திலும் உணரப்பட்டது

மியான்மரில் இன்று காலை 7.42 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8க பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்ததாகவோ, உயிர் சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை எந்தவித தகவலும் இல்லை.
இது குறித்து மாண்டலேவைச் சேர்ந்த சான் யு கூறுகையில்,
திடீர் என்று வீடு குலுங்கியது. படுக்கையில் படுத்திருந்த தான் பதறியடித்துக் கொண்டு எழுந்து எனது மகளையும் தூக்கிக் கொண்டு தெருவுக்கு ஓடினேன். அங்கு சென்று பார்த்தால் ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். சிலர் பயத்தில் அலறினர் என்றார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடங்களில் இரண்டு முறை மீண்டும் நிலம் அதிர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்தில் உணரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications