இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது: இங்கிலாந்து வெளிவிவகாரக் குழு
லண்டன்: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த முடிவு செய்ததற்கு இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் அடுத்த ஆண்டு காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டை கொழும்பில் நடத்துவது என எடுக்கப்பட்ட முடிவு தவறானது என்று இங்கிலாந்தின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழு விமர்சித்துள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் அறிக்கையில், 2013ல் காமன்வெல்த் மாநாடு நடைபெற இருக்கும் இலங்கையில் மிக மோசமான மனிதஉரிமைமீறல்கள் நடைபெற்றதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. இலங்கையில் அமைதி, உண்மையை ஆராயும் சுதந்திரமான விசாரணை, மனிதஉரிமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் வரை அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டி; பங்கேற்க இங்கிலாந்து பிரதமர் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் முந்தைய ஆளுகைக்குட்பட்ட நாடுகளின் கூட்டமைப்புதான் காமன்வெல்த் என்பதால் இம்மாநாட்டை இங்கிலாந்தே புறக்கணித்தால் இலங்கைக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.












Click it and Unblock the Notifications