மும்பை தாக்குதல் நினைவு தினம்; உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பைக்குள் ஊடுருவி சத்ரபதி சவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் மற்றும் ஒபராய் ஓட்டல்கள், லியோபோல்ட் கபே உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
தாக்குதல் சம்பவம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி மும்பையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா ஆளுநர் கே. சங்கரநாராயணன், முதலமைச்சர் பிரித்விராஜ் சவான், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்ற தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கசாப்புக்கு தூக்கு
தாக்குதலின்போது 9 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த கசாப் கடந்த 21ம் தேதி புனே, எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
தலிபான்கள் எச்சரிக்கை
கசாபை தூக்கிலிட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்திய இலக்குகளை குறிவைத்து தாக்குவோம் என்று பாகிஸ்தான் தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகில் எந்தவொரு பகுதியிலும் இந்த தாக்குதல் நடக்கும் என்று டி.டி.பி. (தெஹ்ரீக் -ஐ-தலிபான் பாகிஸ்தான்) என்ற அமைப்பின் செய்தித்தொடர்பாளர் இசனுல்லா இசான் கூறியிருந்தார்.
இதனையொட்டி மும்பை மட்டுமல்லாது நாட்டின் முக்கிய தலைநகரங்களில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் பெருமளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் பிற முக்கிய கேந்திரங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் சோதனை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டன. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications