ஆக்சிஜன் சப்ளை நின்றதால் டெல்லி மருத்துவமனையில் 4 நோயாளிகள் மரணம்
டெல்லி: டெல்லியில் தலைக்காய சிகிச்சை பிரிவு மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சப்ளை திடீரென்று நின்று போனதால் ஐசியு வார்டில் இருந்த நான்கு நோயாளிகள் மரணமடைந்தனர்.
வடக்கு டெல்லியில் உள்ள சுஸ்ருதா மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1998 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் விபத்து காய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. செவ்வாய்கிழமையன்று இந்த மருத்துவமனையின் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு 30 நிமிடங்கள் ஆக்சிஜன் திடீரென்று நின்று போனது. இதில் அந்த அறையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 நோயாளிகள் உயிருக்குப் போராடினர். ஆக்சிஜன் சப்ளை கிடைக்காமல் நான்கு நோயாளிகள் மரணமடைந்தனர்.
நிர்வாகத்தின் அலட்சிய பதில்
இந்த துயர சம்பவம் பற்றி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். மருத்துவமனையின் கண்காணிப்பாளரான டாக்டர் ரிச்சா தீவான், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்த இடத்தில் பயிற்சி இல்லாத ஒரு நபர் இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது. திங்கட்கிழமையன்று மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை செய்யும் இடத்தில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அதுவும் அவருக்கு இதுபற்றி சரியான பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனையில் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
மாநில சுகாதாரத்துறை விசாரணை
இது பொய்யான தகவல் என்றும் இதுபோன்று பலமுறை இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை தடைபட்டு நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து விழித்துக்கொண்டுள்ள மாநில மருத்துவத்துறை இதுகுறித்து விளக்கம் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.கே. வாலியா, மருத்துவமனையின் ஆக்சிஜன் சப்ளை பிரிவு உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தவிட்டுள்ளார். மேலும் நோயாளிகளின் மரணம் குறித்து விசாரணை நடத்த மூவர் அடங்கிய குழு ஒன்றையும் நியமித்துள்ளார். இந்த குழு மூன்று நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications