டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் ஜெகதீஷ் ஷெட்டர் ஆலோசனை
டெல்லி: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத்தை கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முதலில் தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட முடியாது என்று கூறிவந்தது கர்நாடக அரசு. பின்னர் இரவோடு இரவாக திடீரென காவிரி நீரை திறந்துவிட்டிருக்கிறது கர்நாடகா அரசு.
இந்நிலையில் நேற்று இரவு கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் டெல்லி சென்றார். அவருடன் அம் மாநில சட்ட அமைச்சர் சுரேஷ்குமார், துணை முதல்வர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர்.
இன்று காலை முதல் மாநிலத்தின் எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களை ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத்தை ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான கர்நாடகா குழு சந்தித்து, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட இயலாது என்று விளக்கம் அளித்தது.












Click it and Unblock the Notifications