தமிழக அமைச்சர் முகம்மது ஜான் மீது பண மோசடி புகார்
வேலூர்: 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக தமிழக சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முகமது ஜான் மீது, ராணிப்பேட்டை அதிமுக நிர்வாகி போலீசில் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் முனுசாமி. அதிமுகவைச் சேர்ந்த இவர், வாலாஜா ஒன்றிய செயலாளர் பதவி கேட்டு அமைச்சர் முகமது ஜானை அணுகியதாக தெரிகிறது. பணம் தந்தால், பதவி வாங்கித் தருவதாக அமைச்சர் கூறியதாகவும், இதன் பேரில் முனுசாமி அமைச்சரிடைம் 5 லட்சம் ரூபாய் பணம் தந்தாகவும் கூறப்படுகிறது. ஆனால், கூறியபடி அந்த பதவியை அமைச்சர் வாங்கித் தராததால், கொடுத்த பணத்தை முனுசாமி திருப்பிக் கேட்டுள்ளார்.
அதற்கு பணத்தை தர அமைச்சர் முகமது ஜான் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரனிடம் முனுசாமி புகார் அளித்துள்ளார்.
அதிமுக அமைச்சர்கள் பலரின் மீது பணமோசடி, நிலமோசடி புகார் எழுந்துவருவதால் அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications