இலங்கையில் போருக்குப் பின் மாயமான 1 லட்சம் தமிழர்.. : பிபிசி முன்னாள் நிருபர் திடுக் தகவல்

இலங்கை இறுதிப் போர் தொடர்பாக 'ஸ்டில் கவுண்டிங் டெட்' என்ற தலைப்பில் பிரான்சிஸ் ஹாரிசன் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இப்புத்தகத்தின் தமிழ் பதிப்பை சென்னையில் நேற்று வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் ஐ.நா. குழு நடத்திய விசாரணையில் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆனால் உலக வங்கி கணக்கெடுப்பின்படி முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் மாயமாகி உள்ளனர்.
இவர்கள் கொலையானதாக கருதவில்லை. அதே நேரத்தில் அவர்கள் கதி என்ன என்ற கேள்விக்கு இலங்கை அரசுதான் பதில் சொல்ல வேண்டும் என்றார் அவர்.
பிரான்சிஸ் ஹாரிசன் கடந்த 2000 முதல் 2004-ம் ஆண்டு வரை இலங்கையில் பி.பி.சி. நிருபராக பணியாற்றினார். பின்னர் 2007-ம் ஆண்டு மீண்டும் அங்கு சுற்றுப் பயணம் செய்தார்.












Click it and Unblock the Notifications