அன்று கூட்டத்தை ஆதரித்த நான் இன்று தோட்டத்தை ஆதரிக்கிறேன்: நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

Nanjil Sampath
கரூர்: எதையும் சாதிக்கப் போவதில்லை என ஒரு கூட்டத்தை ஆதரித்த நான் இப்போது தோட்டத்தை ஆதரிக்கிறேன் என்று அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த காலங்களை கசக்கி எறிந்துவிட்டு அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவுக்கு காலதாமதமாக வந்துள்ளேன் என்றே கவலைப்படுகிறேன்.அன்று ஒரு கூட்டத்தை ஆதரித்து வந்தேன். இப்போது, தோட்டத்தை ஆதரித்துள்ளேன்.

2001-06 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. 500 மெகாவாட் உபரியாக இருந்தது. அதை பிற மாநிலங்களுக்கு விற்று அந்தப் பணத்தை அரசு கஜானாவில் சேர்த்தவர் ஜெயலலிதா. ஆனால், 2006- 11-ல் ஆட்சியில் இருந்த கருணாநிதியால், மின் வாரியத்துக்கு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் இன்றைய மின் தட்டுப்பாட்டுக்கு கருணாநிதியே முக்கிய காரணம்.

டெல்லியில் உபரியாக உள்ள 1200 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு தாருங்கள் என ஜெயலலிதா கடிதம் எழுதினார். ஆனால், மத்திய அமைச்சராக உள்ள கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தில்லியில் உபரியாக உள்ள மின்சாரத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவில்லை. பாகிஸ்தானுக்கு இந்திய அரசாங்கம் 5000 மெகாவாட் மின்சாரம் வழங்குகிறது. ஆனால், உபரியாக உள்ள 1200 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு மறுக்கிறது. காவிரி நதி நீர் சிக்கலுக்கும் கருணாநிதிதான் காரணம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+