For Daily Alerts
Just In
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்- தென் மாவட்டங்களில் இன்று முதல் மழை!
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் அண்மையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. தமிழக கடலோரப் பகுதியில் இருந்து தொலைவில் இருப்பதால் தென் மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்யக் கூடும்.
தமிழகத்தின் இதர பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Comments
English summary
MET officials say that currently, form of a depression that could bring rain in South Tamilnadu.
Story first published: Sunday, December 16, 2012, 12:03 [IST]