கிறிஸ்துமஸை முன்னிட்டு சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு நாளை முதல் ஜன. 1ம் தேதி வரை விடுமுறை
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கு நாளை முதல் வரும் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சொக்கலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
டிசம்பர் 22ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. விடுமுறை கால நீதிமன்றம் வரும் 27ம் தேதி மற்றும் 28ம் தேதி செயல்படும். இதில் நீதிபதிகளாக வெங்கட்ராமன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் செயல்படுவார்கள்.
இதில் ஜாமீன், முன் ஜாமீன் வழக்குகளை நீதிபதி வாசுகி விசாரிப்பார். பொதுநலன் வழக்குளை இருவரும் சேர்ந்து விசாரிப்பார்கள். ரிட் வழக்குளை நீதிபதி வெங்கட்ராமன் விசாரிப்பார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு விடுமுறை கால நீதிபதிகளாக சி.எஸ்.கர்ணன், ரவிந்திரபாபு ஆகியோர் பணியாற்றுவார்கள். இங்கு வரும் 24ம் தேதி மற்றும் 26ம் தேதி அவசர வழக்குகளை பதிவு செய்யலாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications