உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கி மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்: ஜெ. கிறிஸ்துமஸ் வாழ்த்த

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
அன்பின் திருவுருவாம், கருணையின் வடிவமாம். இயேசுபிரான் அவதரித்த நன்னாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆண்டவனின் பிள்ளைகளாகிய நாம் அன்புடனும், சகோதரத்துவ உணர்வுடனும் இயேசுபிரானின் உரிய நெறியைப் பின்பற்றி பகைவரிடத்திலும் அன்பு காட்டி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ இந்த இனிய நாளில் உறுதியேற்போம். அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் பிறந்த இந்த நன்னாளில் உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கி மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, என் அன்புக்குரிய கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications