டெல்லியில் ஜெ.வை அவமதிக்கவில்லை: மத்திய அரசு விளக்கம்
டெல்லி: தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக பார்லிமெண்ட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா கூறுகையில். தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் தலா 10 நிமிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேச வேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி செய்யப்பட்டது.
காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும், காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களுக்கும் ஒரே மாதிரிதான் நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில முதல்வர் 10 நிமிடம் கடந்து பேசிய போதும் மணி ஒலிக்கப்பட்டது. எனவே இதில் எப்படி அவமானம் செய்து விட்டதாக சொல்ல முடியும்?
இத்தகைய கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது சரியானது அல்ல. இதுவரை எந்த முதல்வரும் இப்படி குற்றம் சாட்டியதில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications