டெல்லி கூட்டம்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் வெளிநடப்பு!

டெல்லியில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தை இன்று காலை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும்போது 10-வது நிமிடத்தில் மணியடித்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். இதனால் கடுமையாக அதிருப்தி அடைந்த ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததுடன் செய்தியாளர்களிடம் கொந்தளித்தார்.
இதேபோல் குஜராத் மாநிலத்தில் 4வது முறையாக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற நரேந்திர மோடியும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பேசிக்கொண்டிருந்த போது 10 நிமிடத்தில் மணி அடிக்கப்பட்டு நிறுத்துமாறு சொல்லப்பட்டது. இதனால் அவரும் வெளிநடப்பு செய்தார்.
வெளிநடப்பு செய்த மோடி, செய்தியாளர்களிடம் பேசுகையில், பல மாநிலங்களில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. ஆனால் மத்திய அரசு 8% இலக்கு என்று கூறுகிறது. இது எப்படி சரியாகும்..
மத்திய அரசின் கருத்தைத்தான் மாநில முதல்வர்கள் கேட்க வேண்டும் என்பது சரியில்லை. மாநில முதல்வர்களின் கருத்தைத்தான் மத்திய அரசு கேட்க வேண்டும். மத்திய அரசின் கருத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதற்கு ஒரு கூட்டம் கூட்டப்பட வேண்டியது இல்லை. தற்போதைய நிலையில் மாநில முதல்வர்களின் கருத்துதான் முக்கியமானது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications