நாஞ்சில் சம்பத்துக்கு நன்றிக் கடன்... 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறும் தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

Nanjil Sampath
சென்னை: மதிமுகவிலிருந்து அதிமுகவுக்கு வந்து சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு பிரதியுபகாரமாக அவர் மீது போடப்பட்டிருந்த 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்து கோர்ட்டிலும் மனு செய்துள்ளது.

மதிமுகவில் கொள்கை விளக்க அணிச் செயலாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத் சமீபத்தில் அதிமுகவுக்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்ற முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நாஞ்சில் சம்பத்துக்கு கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பதவியைக் கொடுத்தார். சில நாட்களில் காஸ்ட்லியான இன்னோவா காரையும் அளித்தார். இந்த நிலையில் இன்னொரு உதவியாக சம்பத் மீதான 3 அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு நாஞ்சில் சம்பத் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தது. மொத்தம் 3 வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தொடரப்பட்டன. இவற்றை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+