செல்போனில் படம்பிடித்து மிரட்டியதால் தீக்குளித்த மாணவி மரணம்: இருவர் கைது
வேலூர்: வேலூர் அருகே செல்போனில் படம்பிடித்து பேஸ்புக்கில் போடுவதாக இளைஞர்கள் மிரட்டியதால் தீக்குளித்த மாணவி உயிரிழந்தார்.
ஆற்காடு பகுதியைச் சேர்ந்த அந்த மாணவியை அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், செல்போனில் படம்பிடித்து தமது படத்துடன் இணைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிடப் போவதாக இளைஞரும் அவரது நண்பரும் மிரட்டியுள்ளனர்.
இதனால் அஞ்சிய அந்த மாணவி, உடனே தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். இதில் படுகாயமடைந்த மாணவியை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அம்மாணவி உயிரிழந்தார்.
இதனிடையே இது தொடர்பான புகாரின்பேரில்,மாணவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications