அமெரிக்காவில் தொடரும் துயரம்- வீட்டைப் பூட்டி 3 பேர் சுட்டுக் கொலை! கொலையாளியை போலீஸ் கொன்றது!
கொலொரொடா: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஓயவில்லை. கொலொரொடாவின் அரோரா பகுதியில் ஒரு வீட்டைப் பூட்டி மூவரை கொலைகாரன் சுட்டுக் கொன்றுள்ளான். அவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
கொலொராடா பகுதியில்தான் கடந்த ஜூன் 20-ந் தேதியன்று திரையரங்கு ஒன்றில் நுழைந்த மர்ம மனிதன் 12 பேரை சுட்டுக் கொலை செய்தான். இன்று அதே பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த மர்ம மனிதன் அந்த வீட்டில் இருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்தான்.
இதை அறிந்த பக்கத்து வீட்டினர் போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். போலீசார் வீட்டை சுற்றி வளைத்து அவனை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்த 3 பேரை அவன் சுட்டுக் கொலை செய்தான்.
பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார் மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications