அஸ்ஸாமில் 9ம் வகுப்பு மாணவியை கற்பழித்த எய்ட்ஸ் நோயாளி
குவாஹாத்தி: அஸ்ஸாமில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எய்ட்ஸ் நோயாளி ஒருவரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சில்சார் நகர் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 20ம் தேதி காலை 4 மணிக்கு தனது வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வராததால் பெற்றோர் அவரை தேடிச் சென்றனர். ஆனால் அவரைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சில மணி நேரம் கழித்து அம்மாணவி வீட்டில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மயக்கம் தெளிந்த பிறகு அவர் போலீசாரிடம் கூறுகையில்,
கழிவறைக்கு சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தியதாகவும். அதில் ஒருவர் தனது முகத்தில் ஸ்ப்ரே அடித்தவுடன் மயங்கிவிட்டேன். அதில் ஒருவர் எங்கள் பகுதியைச் சேர்ந்த ராஜிப் போர்லஸ்கார் என்றார்.
மாணவியை பரிசோதித்ததில் அவர் கற்பழிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜிபை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இதையடுத்து ராஜிப் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், தான் ஒரு ஹெச்.ஐ.வி. நோயாளி என்றும், சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் தனக்கு ஜாமீன் அளிக்குமாறும் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் அளிக்க மறுத்த நீதிமன்றம் அவரை சிறையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்குமாறு தெரிவித்துள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications