தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க மறுத்து கர்நாடகா அடம்! மறுபரிசீலனை மனு செய்ய முடிவு!
பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது. மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யவும் கர்நாடகா முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில குடிநீர் தட்டுபாடு பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழகத்திற்கு 2.44 டி.எம்.சி நீரைத் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை பரிசீலிக்கக் கோரும் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
கிருஷ்ணராஜசாகர் அணையில் 7 டி.எம்.சி. தண்ணீரும், கபினி அணையில் ஒரு டி.எம்.சி. தண்ணீரும் இருப்பதாலேயே தமிழகத்துக்கு நீரை திறந்துவிட முடியாது என்பது கர்நாடகாவின் நிலைப்பாடு.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கவும் கர்நாடக எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications