டெல்லியைப் போல தென்னாப்பிரிக்காவில் பாலியல் வன்முறை: தொடர் போராட்டம்
கேப் டவுன்: தென் ஆப்பிரிக்காவில் 17 வயது பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணின் கொடூர மறைவுக்கு நீதி கேட்டு மக்கள் போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள்.
வெஸ்டர்ன் கேப் (Western Cape) பகுதியில் உள்ள ப்ரெடஸ்டார்ப் (Bredasdorp) சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்.
கட்டுமான பணியிடம் ஒன்றில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அந்த பெண், தனது நிலைக்கு காரணமானவர் பற்றி தெரிவித்ததன் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரமான மரணம் தென்ஆப்ரிக்க மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் அவர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிராக தென் ஆப்ரிக்காவில் வன்முறைகள் பெரிதும் அதிகரித்து வருவதாகவும், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியவர்களில் ஒருவர் அந்த பெண்ணின் குடும்ப நண்பர் என்பது அந்த பெண்ணின் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications