சுரண்டையில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த வாலிபரை தேடும் போலீசார்
நெல்லை: சுரண்டையில் அரிவாளுடன் வாலிபர் ஒருவர் கொலை வெறியுடன் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சுரண்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சுரண்டை பேருந்து நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். சட்டை அணியாமல் லுங்கியும், கருப்பு கலரில் கைப்பனியனும் அணிந்திருந்தார். அவர் கையில் நீண்ட அரிவாளை வைத்து கொண்டு சத்தமிட்டப்படி அங்கும் இங்கும் பரபரப்பாக சுற்றித் திரிந்தார். இதனால் அங்கு நின்ற பெண்கள், மாணவ, மாணவிகள் அலறி அடித்து ஓடினர். அந்த வாலிபர் பேருந்து நிலையம், மார்க்கெட், பஜார் பகுதியில் அரிவாளை வீசியபடியே வந்தார். இது குறித்து சுரண்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த வாலிபர் தலைமறைவானார்.
வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போன்ற தோற்றம் கொண்ட அந்த வாலிபரின் பனியனில் இந்தி வார்த்தை எழுதப்பட்டிருந்தது. அவர் யார், எந்த ஊர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரையாவது கொலை செய்யும் நோக்கத்தில் அவர் சுரண்டை வந்தாரா, அல்லது குடிபோதையில் அரிவாளை சுழற்றி பந்தா காட்டினாரா என தெரியவில்லை. இந்த சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications