அமைச்சர் பதவியை இழந்தவர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்: ஜெயலலிதா

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. வும், அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.கோகுல இந்திரா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் வி.எஸ்.விஜய் எம்.எல்.ஏ. வேலூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர், இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.சி.ஏழுமலை ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் எஸ்.சி.ஏழுமலை (மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், சுமைதாங்கி) நியமிக்கப்படுகிறார். வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் இரா.வில்வநாதன் மற்றும் வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் எஸ்.ஆர்.கே.அப்பு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.ஆர்.சிவபதி எம்.எல்.ஏ. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
திருச்சி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு, ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்ட பணிகளை, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. கூடுதலாக மேற்கொள்வார். காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.சோமசுந்தரம் எம்.எல்.ஏ. அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications