சென்னையில் நெஞ்சை உறைய வைக்கும் கொடூர கொலை! ஒரு மாத குழந்தையை கொன்ற தாய் கைது!!
சென்னை: சென்னையில் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு கொடூர கொலையை செய்திருக்கிறார் கல்நெஞ்ச தாய். ஒரு மாதமேயான பெண் குழந்தையை தாயே கொன்று வாஷிங்மெஷினில் மறைத்து வைத்து இருக்கிறார்.
சென்னை வேப்பேரியில் ஆந்திராவைச் சேர்ந்த வெங்கல்ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரம்யாவுக்கு ஆந்திராவைச் சேர்ந்த பாபுவுக்கும் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக வந்திருந்தார் ரம்யா. கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி ரம்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நேற்று இரவு வெங்கல்ராவ் மருமகன் பாபுவுடன் ஆந்திரா சென்றிருக்கிறார். இன்று காலை தமது கைக்குழந்தையை காணவில்லை என்று ரம்யா கதறி அழுதிருக்கிறார். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர் ரம்யாவின் வீட்டில் வந்து குழந்தையைத் தேடியிருக்கின்றனர். குழந்தையை துணியால் இறுக்கி கொலை செய்து வாஷிங்மிஷினில் அடைத்து வைத்திருந்தது அப்போது தெரியவந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கைக் குழந்தையைக் கொலை செய்த தாய் ரம்யா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு உடந்தையாக வேறு யாரும் இருந்தனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications